×

வேளச்சேரி குருநானக் கல்லூரி மாணவர்களிடையே குழு மோதல் கல்லூரி வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: 3 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை

சென்னை: வேளச்சேரி குருநானக் கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட குழு மோதலில் நாட்டு வெடி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 3 மாணவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வேளச்சேரியில் குருநானக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 500க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாணவர்களிடையே குழு மோதல் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை கல்லூரி மாணவர்களிடையே மீண்டும் மோதல் வெடித்தது. ஒரு தரப்பு மாணவர்கள், மற்றொரு தரப்பு மாணவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில் சில மாணவர்கள் காயமைந்ததாக கூறப்படுகிறது. மாணவர்கள் மோதலால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து கிண்டி போலீசார், கல்லூரிக்கு விரைந்து சென்று நாட்டு வெடி குண்டு வீசிய மாணவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மோதல் தொடர்பாக 3 கல்லூரி மாணவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் நாட்டு வெடிகுண்டு வீசிய மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

The post வேளச்சேரி குருநானக் கல்லூரி மாணவர்களிடையே குழு மோதல் கல்லூரி வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: 3 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Velachery Guru Nanak College ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...